மலரும் அரும்புகள்

உள்ளத்தில் உள் வாங்கியதை எள்ளலவும் தயங்காமல் வெள்ளமென பதித்திடுங்கள்.

Monday, January 28, 2008

2008 ம் வருடமே வருக..!


வளமான வாழ்வு எல்லோருக்கும் தருக!.
எண்ணிய யாவும் கைகூட நின்று நீயூம் துணைகூட..
ஏழை என்ன, பணக்காரர் என்ன, யாவருக்கும் உற்றதுணையாக
எந்தச் சோகம் வந்திடினும், எதிர்த்து நின்று சாதிக்கும் வல்லமையையும்..

இன்பதுன்பம் எதுவென்றாலும்..
இறுதிவரை உறுதியாக நின்று..
இதயத்தில் உதயம் பிறக்க எந்நாளும்..
இன்னல்களின்றி, போகின்ற வழிமுழுக்க பூக்கள்தூவி..

உலகில் அமைதி நிலவிட..
உள்ளங்கள் மகிழ்ந்து வியந்திட..
உண்மைகள் எங்கும் ஜெயித்திட..
வறுமைகள் எங்கும் அழிந்திட..

வசந்தங்கள் என்னாளும் நிலவிட..
கேட்டவரம் அத்தனையும் கிடைத்திட
வாழ்த்துக்கள் பல கூறி
வரவேற்கின்றோம் ஆண்டே 2008.

தென்றல்..




இயந்திரமயமான உலகில்..
இயந்திரங்களோடு எட்டுமணி
நேரவேலை பார்த்து..
வேதனையில் வெளியேற..

அதிகாலைப்பொழுதில்..
உடலும் உஷ்ணமடைய...
உள்ளமும் தளர்ச்சி காண..
உதயத்திற்கு முன்னாடி..

கடமைகளை முடித்தவளாய்..
காடோ, வீடோ நம்ம நாடே..
நல்லது என்று எண்ணியவளாய்..
நடையைக்கட்ட வீடு விரைய...

அற்புதமான தென்றல் ஒன்று..
மெல்லத்தழுவிக் கொண்டு..
கொண்ட துன்பம் அத்தனையும்..
துடைத்தெறிந்து மனத்தீபம் ஏற்றிச்சென்றது.