மலரும் அரும்புகள்

உள்ளத்தில் உள் வாங்கியதை எள்ளலவும் தயங்காமல் வெள்ளமென பதித்திடுங்கள்.

Monday, January 28, 2008

2008 ம் வருடமே வருக..!


வளமான வாழ்வு எல்லோருக்கும் தருக!.
எண்ணிய யாவும் கைகூட நின்று நீயூம் துணைகூட..
ஏழை என்ன, பணக்காரர் என்ன, யாவருக்கும் உற்றதுணையாக
எந்தச் சோகம் வந்திடினும், எதிர்த்து நின்று சாதிக்கும் வல்லமையையும்..

இன்பதுன்பம் எதுவென்றாலும்..
இறுதிவரை உறுதியாக நின்று..
இதயத்தில் உதயம் பிறக்க எந்நாளும்..
இன்னல்களின்றி, போகின்ற வழிமுழுக்க பூக்கள்தூவி..

உலகில் அமைதி நிலவிட..
உள்ளங்கள் மகிழ்ந்து வியந்திட..
உண்மைகள் எங்கும் ஜெயித்திட..
வறுமைகள் எங்கும் அழிந்திட..

வசந்தங்கள் என்னாளும் நிலவிட..
கேட்டவரம் அத்தனையும் கிடைத்திட
வாழ்த்துக்கள் பல கூறி
வரவேற்கின்றோம் ஆண்டே 2008.

0 Comments:

Post a Comment

<< Home