மலரும் அரும்புகள்

உள்ளத்தில் உள் வாங்கியதை எள்ளலவும் தயங்காமல் வெள்ளமென பதித்திடுங்கள்.

Thursday, April 13, 2006

சித்திரையே நல்வாழ்வு தருக.


சித்திரைப் புத்தாண்டே வருக
எத்தரை நாம் வாழ்ந்திடினினும்
முத்திரை பதித்த எம் வாழ்வினில்
சித்திரை சிறப்பினைத் தருக

எட்டுத்திக்கும் எதிரொளிக்கும்
பட்டுத்தெறிக்கும் தமிழ்அனைத்தும்
கட்டுக்கோப்பாய் காத்திருக்கும்
காலச்சார தமிழ்சித்திரையே

தங்கத்தமிழ் பட்டாடை கட்டி
தாயகத்தில் பட்டுக்கொடி பறக்கவிட்டு
தரைதனில் மண்பானை பொங்கலிட்டு
மகிழ்வுற்ற பொண்ணான வாழ்வுகிடைத்திடுமா

பதிந்திட்ட மனக்காயமாற முன்
பாதிக்கப்பட்ட எம்மினம் மகிழ்வுறுமா
சித்திரையே உன் வரவினால்நல்வாழ்வு வருமா
எனியும் வேண்டாம் துன்பம்இது விலகுமா

துன்பக்கடலில் ழூழ்கியது போதும்
இன்பக் கனவு கைகூடும் நேரம்
தங்கத் தமிழக்கு விடிவு வரும்நேரம்
தமிழ்சித்திரையே சிந்தம் குளிர

தமிழ்மக்கள் மனமகிழ
சிறப்பான வாழ்வு கிடைக்க
தரணியில் தமிழ் கொடிபறக்க
சித்திரையே சிறந்த பலன் தருவீர்.

0 Comments:

Post a Comment

<< Home