என் ஆசைகள்

காலமெல்லாம் கணவரோடு
வாழ வேண்டும்.
நாளெல்லாம் அதிகளவில்
படிக்க வேண்டும்.
என் எல்லா உறவுகளையும்
கண்டு வரவேண்டும்.
ஒலிம்பிக் ஓட்டப்பந்தயத்தில்
பங்குபற்ற வேண்டும்.
கவலைகள் இல்லாமல்
வாழ வேண்டும்.
கண்ணீர் சிந்தாமல்
களிப்புற்றிருக்க வேண்டும்.
உலகமெல்லாம் சுற்றி
வர வேண்டும்.......
என் சகோதரிகளோடு ஒன்றாக
ஒரு வீட்டில் வாழவேண்டும்.
பிரசித்தி பெற்ற கோவில்களை
சுற்றி கும்பிட்டு வரவேண்டும்.
எனக்கு பிடித்த நண்பர்களை
பார்த்து வரவேண்டும்.
அடடா இத்தனை ஆசைகளும்
மொத்தமாய் நிறைவடைய வேண்டும்.
ஆண்டவன் அருள் தந்தால்
மீண்டுமொரு பிறவி இருந்தால்
வேண்டும் வரம் யாவும்
நிறைவேற்ற வேண்டும்.
நிறைவாக வாழ்வு நிறைவடைய
நீண்ட ஆயுள் ஒன்றும் எனக்கில்லை
குற்றமமேதும் புரியவிலலை நான்
புற்று நோயால் பாதிப்புற்று
மாதம் ஒன்றே இன்னும்
உயிர் வாழ்வேனாம்.
வேண்டும் என் ஆசைகள்
நிறைவேறுமா என் ஆசைகள்.
2 Comments:
At 6:06 AM,
maniabi said…
very nice kavithai.ungal aasaigal ellam neeraiverum,anal atukkaga neegal kadasilyel eluthiyathai vaseekkum pothu patharukirathu nenjam.....
At 6:07 AM,
maniabi said…
very nice kavithai.ungal aasaigal ellam neeraiverum,anal atukkaga neegal kadasilyel eluthiyathai vaseekkum pothu patharukirathu nenjam.....
Post a Comment
<< Home