மலரும் அரும்புகள்

உள்ளத்தில் உள் வாங்கியதை எள்ளலவும் தயங்காமல் வெள்ளமென பதித்திடுங்கள்.

Tuesday, April 18, 2006

இதயத்தில் ஓர் வலி



இதயத்தில் ஓர் வலி
இடம் பெயர்ந்தும்
இனம் புரியா ஓர் வலி

இனம் பல அழிந்து
தினம் சாகும் எம்மினம்
மனம் படும் துயரம்

தினம் படும் துன்பத்தில்
கொடும் ஆட்சியிது
கொடுமைகள் நிறைந்ததிது


அகதிமுகாமில் பிரசவம்
தனிமை குடிசையில்
குடும்பம் குடித்தனம்

குற்றூயிராய் தந்தை
நடபாதையில் ஊசலாட
மீண்டும் அகதிமுகாமில்

அழுது ஓயவில்லை
எமக்கும் விடிவு
கிடைக்கவில்லை


நாளைய பரீட்சைக்கான
வினாவிடை படித்திருக்க
இன்றே ரவுண்டப்பில்

கேள்வி பதில்
கேட்டது அதிபரில்லை
அதிகார அமைப்பு

பயங்கரவாதமா இல்லை
பள்ளி மாணவனா
பாதிக்கப்பட்டது என் மனம்


தடைகள் ஏதும் வராது
இடர்கள் பல வந்தும்
இடம்பெயர்ந்தோம் இன்று

வந்ததும் வாழ்க்கைக்காக
வாழ்வு இல்லை
வாழ்வதற்காய் வாழ்க்கை

தொடர் கதை தான்
முடிவில்லா தொடர்கதை தான்
விடிவில்லா வாழ்க்கையிது


விடியுமா.....?
நல் வாழ்வு எமக்குண்டா...?
இதயத்தில் ஓர் வலி
ஓயாமல் ஒலிக்கின்றது.

2 Comments:

  • At 10:31 PM, Blogger ரவி said…

    கவிதை நன்றாக உள்ளது...இந்த வலியை அனுபவித்தவர்களுக்கு தான் தெரியும் என்று நினைத்தேன்...நீங்களும் நன்றாக பதிவு செய்துள்ளீர்..

     
  • At 6:14 AM, Blogger maniabi said…

    mega arumaiyana kavi vareegal.

    இனம் பல அழிந்து
    தினம் சாகும் எம்மினம்

    ippavum needeekkum kodumai....nalla muyatrchi paraddugal...

     

Post a Comment

<< Home