மலரும் அரும்புகள்

உள்ளத்தில் உள் வாங்கியதை எள்ளலவும் தயங்காமல் வெள்ளமென பதித்திடுங்கள்.

Thursday, November 15, 2007

ஒளி விளக்கு.......

ஒளி விளக்கு.......


இதுவரை நாள் இப்படியிருந்ததில்லை
இனிமேலும் எப்படி நான் இருப்பேனோ
இறைவனை தவிர எனக்குத் தெரியவில்லை..
பாடல் கேட்க பிடிக்கவில்லை

யாரும் கதைகேட்க விருப்பமில்லை
உணவு இருந்தும் உண்ண பிடிக்கவில்லை
உயிரோடு இருக்கவும் எனக்கு இஷ்டமில்லை
அதிகாலை என்ன மாலை என்ன
டெலிபோன் அடித்தால் பதறுது எனக்கு..
எங்கே மறுமுனையில் ஒப்பாரியின் அழுகுரல் எதிரொலித்திடுமோ என்ற அச்சம் மனசில இருக்கு..


வேலைக்கு லீவெடுத்து ஓய்வெடுத்தால்
வேதனைகள் என்னை வாட்டி வதைக்குது..
வேலைக்குப் போய் வந்தால் ஆறுதல் என்றால்
வெந்து துடிக்கிறது நினைவுகளால் இதயம் நொந்து...


நாமும் அங்க போனால் மனசுக்கு ஆறுதல் என்றால்
பழாய்ப்போன பாஸ்போர்ட் வர அதிகநாளெடுக்குமாம்..
பாவம் தான் நான் செய்த பலன் அறிகிறேன் இவ்வுலகில்..
அதனாலோ உயிர் தந்த உறவைவிட்டு அதிதூரத்தில் துயரமாக..


பதறிதுடித்து அழுகிறேன் நானும் தினமும் பரிதாபத்திற்காவது இறைவன் கருணை காட்டமாட்டானா..
பாசத்திற்குரிய எங்கள் ஐயா மீண்டும் பழையநிலைக்கு ஆளாகமாட்டாரா..
ஐயா! ஐயா! என்று அழைக்கும் என் தந்தைக்கு
உடல் ஆரோக்கியமாகாதா?